Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்

Posted on September 1, 2025 by Admin | 174 Views

அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் அனைத்து வாகனங்களில் உள்ள பயணிகளும் இன்று (செப்டம்பர் 1) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும்.

இந்த விதிமுறைக்கு முரணாக செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்னா தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஆசனப்பட்டி வசதி இல்லாத சில வாகனங்களில் அவை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்