Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்

Posted on September 1, 2025 by Admin | 233 Views

அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் அனைத்து வாகனங்களில் உள்ள பயணிகளும் இன்று (செப்டம்பர் 1) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும்.

இந்த விதிமுறைக்கு முரணாக செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்னா தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஆசனப்பட்டி வசதி இல்லாத சில வாகனங்களில் அவை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்