Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்

Posted on September 1, 2025 by Admin | 333 Views

அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் அனைத்து வாகனங்களில் உள்ள பயணிகளும் இன்று (செப்டம்பர் 1) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும்.

இந்த விதிமுறைக்கு முரணாக செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்னா தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஆசனப்பட்டி வசதி இல்லாத சில வாகனங்களில் அவை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்