Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ராஜபக்ஷவுக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா

Posted on September 2, 2025 by Admin | 167 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், 2010ஆம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலேயே பெரும் அளவில் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டினார்.

இலங்கையின் அடுத்தடுத்து வந்த தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு இல்லை என்றும் அவர் விமர்சித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளையும் சாடிய அவர், தமது கைது விவகாரத்தில் நடப்பு அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், “ராஜபக்ஷ போன்றவர்களுக்கு குறைந்தது 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.