Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அஸ்வெசும பயனாளிகளுக்கு செப்டம்பர் மாத உதவித் தொகை வழங்கும் திகதி அறிவிப்பு

Posted on September 10, 2025 by Admin | 406 Views

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாத அஸ்வெசும நிவாரண உதவித் தொகை நாளை மறுநாள் (12) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இந்த நிவாரண உதவிக்காக மொத்தம் ரூ. 11,201,647,000 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அது 1,412,574 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 12ஆம் திகதி முதல் தகுதி பெற்ற பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.