Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அஸ்வெசும பயனாளிகளுக்கு செப்டம்பர் மாத உதவித் தொகை வழங்கும் திகதி அறிவிப்பு

Posted on September 10, 2025 by Admin | 223 Views

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாத அஸ்வெசும நிவாரண உதவித் தொகை நாளை மறுநாள் (12) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இந்த நிவாரண உதவிக்காக மொத்தம் ரூ. 11,201,647,000 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அது 1,412,574 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 12ஆம் திகதி முதல் தகுதி பெற்ற பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.