Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” ஒலுவிலில் நடந்தேறியது

Posted on September 15, 2025 by Admin | 290 Views

(ஒலுவில் செய்தியாளர்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” கடந்த 06.09.2025 அன்று ஒலுவிலில் முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதான நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அவர்களின் வழிகாட்டுதலில் ஒலுவில் அல்-ஹம்றா வட்டாரத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் மீராலெவ்வை றினாஸ் அவர்களின் தலைமையில் ஒலுவில் முதலாம் பிரிவில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், பிரதித் தவிசாளர், சபையின் செயலாளர், சபையின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத்திட்டம் பிரதேச மக்களின் தேவைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.