Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

மூன்று நாடுகளுக்கு தலையிடியாக மாறியுள்ள இன்றையப் போட்டி

Posted on September 18, 2025 by Admin | 83 Views

ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 (T20) கிரிக்கெட் தொடரின் முக்கியப் போட்டி இன்று (18) இரவு அபுதாபியில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இந்தப் போட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.

தற்போது குழு Bயில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இலங்கை வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நேரடியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இதனால் 2 புள்ளிகளுடன் இருக்கும் ஆப்கானிஸ்தான் வெளியேறும். அப்போதுதான் 4 புள்ளிகளுடன் பங்களாதேஷ் இரண்டாவது அணியாக தகுதி பெறும்.

ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியல் சிக்கலாகும். இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமமாவார்கள்.

இந்த நிலையில் நெட் ரன் ரேட் (NRR) அடிப்படையிலேயே சூப்பர் 4க்கு செல்லும் அணிகள் தீர்மானிக்கப்படும்.

  • ஆப்கானிஸ்தான்: +2.150
  • இலங்கை: +1.546
  • பங்களாதேஷ்: –0.270

பங்களாதேஷின் NRR மைனஸில் இருப்பதால் அவர்களின் வாய்ப்பு மிகக் குறைவு. இலங்கை மிக மோசமான தோல்வியைச் சந்திக்காத வரை, சூப்பர் 4க்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளே அதிக வாய்ப்பு கொண்டிருக்கின்றன.

🏏 இன்றைய போட்டி, ஆசியக் கிண்ண தொடரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் முக்கியச் சந்திப்பாகக் கருதப்படுகிறது.