Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

முச்சக்கரவண்டியுடன் எரிந்த சடலம் கஹவத்தையில் மர்மமான சம்பவம்!

Posted on May 30, 2025 by Admin | 134 Views

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரமுல்ல – ரக்வானை பகுதியில், 61 வயதுடைய நபர் ஒருவர் முச்சக்கரவண்டியுடன் தீவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீவைத்து கொலைசெய்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (மே 29) பிற்பகலில் இடம்பெற்றதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் இரத்தினபுரி – ரில்ஹேனவத்த பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலும் தெரிவிக்கும்போது,

  • சடலம் தீயில் முற்றாக கருகி இருந்தது
  • முச்சக்கரவண்டியும் முழுமையாக தீக்கிரையாகி இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கஹவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.