இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரமுல்ல – ரக்வானை பகுதியில், 61 வயதுடைய நபர் ஒருவர் முச்சக்கரவண்டியுடன் தீவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீவைத்து கொலைசெய்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (மே 29) பிற்பகலில் இடம்பெற்றதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் இரத்தினபுரி – ரில்ஹேனவத்த பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலும் தெரிவிக்கும்போது,
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கஹவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.