Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து 

Posted on September 23, 2025 by Admin | 74 Views

மின்சார விநியோகத்தைத் தடையின்றி பேணும் நோக்கில் மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் வெளியாகும் வரை இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

பொதுமக்களின் சாதாரண வாழ்வில் இடையூறு ஏற்படாத வகையில் 1979 ஆம் ஆண்டு 61ம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டு இந்த அறிவித்தலை வெளியிட்டார்.