Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நிந்தவூரைச் சேர்ந்த ஹசன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பதிவாளராக பொறுப்பேற்பு

Posted on September 24, 2025 by Admin | 327 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் புதிய பதிவாளராக நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப் எச்.எம்.ஏ. ஹசன் அவர்கள் நேற்று (23.09.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட சுப்ரா தரத்தில் பணியாற்றி வந்த ஹசன் அவர்கள், அரச சேவையில் நீண்டகால அனுபவம் மற்றும் திறமைகளை கொண்ட சிறந்த நிர்வாக ஆளுமையாக கருதப்படுகிறார்.

அவரது ஆற்றல், ஒழுங்குமுறை திறன் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் நிர்வாக முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பாக அமையும்.