Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Posted on October 7, 2025 by Admin | 169 Views

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் மின்னல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிகமாக பலத்த காற்று வீசும் தருணங்களில் மழை பெய்யக்கூடும் என்பதையும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதையும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.