Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on October 15, 2025 by Admin | 113 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இறக்காமம் பிரதேச அபிவிருத்தியை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (15.10.2025) பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மன்ஜுல ரத்நாயக்க தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம். முஸ்மி, பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸார், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பிரதேச மக்களின் நலனையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்கான பல முக்கியமான விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.