Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

22 உயிர்களை பறித்த டெங்கு 

Posted on October 19, 2025 by Admin | 142 Views

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்ச்சியான மழை மற்றும் ஈரமான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை 40,392 டெங்கு நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலைமையை முன்னிட்டு, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் சிறப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.