நிதி அமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்தார்.
ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இலங்க மற்றும் ஆறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக பணிப்பாளராக சிறிவர்தன கடமைகளைப் பொறுப்பேற்பார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜூன் 2) காலை நடைபெற்ற தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்