Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர் பிடிபட்டார்

Posted on October 26, 2025 by Admin | 298 Views

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம நாவின்ன பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின்போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக இந்த கைது இடம்பெற்றது.

இக்காரியத்தில் அரச புலனாய்வு சேவையும் ஒத்துழைப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.