Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – கொழும்பு ப்ளூமெண்டலில் பரபரப்பு

Posted on May 18, 2025 by Admin | 417 Views

கொழும்பு ப்ளூமெண்டல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மே 18 பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.