Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அரசு நியமனங்கள்

Posted on May 20, 2025 by Arfeen | 113 Views

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின்படி, தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி முதித தர்ஷன செனரத் யாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரான சம்பத் மந்திரிநாயக்க, தற்போது கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளராக கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களை உறுதி செய்யும் உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (மே 20) ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கினார்.