Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அரசு நியமனங்கள்

Posted on May 20, 2025 by Arfeen | 160 Views

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின்படி, தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி முதித தர்ஷன செனரத் யாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரான சம்பத் மந்திரிநாயக்க, தற்போது கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளராக கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களை உறுதி செய்யும் உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (மே 20) ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கினார்.