Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் மூவர் இலஞ்ச வழக்கில் கைது

Posted on May 23, 2025 by Hafees | 267 Views

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று மேற்கொண்ட நடவடிக்கையில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், 4 மில்லியன் ரூபாய் பெறுமானமான இலஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது