Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மக்களின் பணம் பொறுப்புடன் பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி உறுதி

Posted on June 2, 2025 by Admin | 255 Views

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், தமது செலவினங்களைக் கூட குறைத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, “வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனின் பணமும் சிக்கனமாகவும், பொறுப்புடன் பயன்படுத்தப்படும் என்பதை அரசு உறுதி செய்யும்” என உறுதியளித்தார்.

அதற்காக, ஜனாதிபதியின் அலுவலக செலவுகளும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், இது மக்கள் பணத்தை வீணடிக்காமல் பயன்படுத்தும் முன்மாதிரியாகவும் செயல்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக அரசு சேவைகள் திறமையான முறையில் வழங்கப்படும் என்றும், கருப்பு பொருளாதார முறைகளை உடைத்து, அனைவரும் சட்டத்திற்குள் இயங்கும் ஒரு தூய்மை நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“வரி சக்தி” எனப்படும் பெயருடன் தொடங்கியுள்ள தேசிய வரி வாரம், ஜூன் 2 முதல் 7 வரை நடைபெறவுள்ளது. இந்த வாரத்தின் மூலம், வரி செலுத்துவதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், 2024–2025 நிதியாண்டுக்கான வரி அறிக்கைகள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்கப்படுவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அங்குரார்ப்பணத்திலும் ஜனாதிபதி நேரடியாக பங்கேற்றார் மற்றும் முதலாவது வரி அறிக்கையைத் தாமே சமர்ப்பித்து நிகழ்வை துவக்கி வைத்தார்.