Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இஸ்ரேல்-ஈரான் பதற்றம், இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Posted on June 13, 2025 by Admin | 344 Views

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசித்து வரும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு சூழ்நிலை கடுமையாக மாறியிருப்பதை கருத்தில் கொண்டு, தற்போது இஸ்ரேலுக்குச் செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் தங்களது பயணங்களை பிற்போட வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் முழுவதும் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விமான சேவைகள் இஸ்ரேலும் ஈரானிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் தங்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாகக் கையிலிருக்க வைத்துக்கொள்ள வேண்டும் என தூதுவர் நிமால் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.