Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அனுராதபுர சிறை அதிகாரி மொஹான் கருணாரத்னையின் விளக்கமறியல் நீடிப்பு

Posted on June 13, 2025 by Hafees | 229 Views

அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (13) அவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கைதி ஒருவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்த குற்றச்சாட்டின் பேரில், மொஹான் கருணாரத்ன கடந்த 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.