Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அக்கரைப்பற்று-பொத்துவில் வீதியில் பயங்கர விபத்து – ஒருவர் பலி, ஒருவர் மருத்துவமனையில்

Posted on June 28, 2025 by Admin | 546 Views

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்த சோகமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவலின்படி, அக்கரைப்பற்றிலிருந்து வரும் போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது. இதில் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் பலத்த காயமடைந்த நிலையில் திருக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் பராமரிப்பு மத்தியிலும் உயிரிழந்துள்ளார். மற்றொருவருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.