Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணி நேர நீர் துண்டிப்பு

Posted on July 7, 2025 by Hafees | 222 Views

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, நீர் விநியோகம் 12 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இத்துண்டிப்பு, இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தால் இயக்கப்படும் நீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படுகின்றது.

அதன்படி, கீழ்க்கண்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்படும்:

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க / சீதுவ நகர சபைப் பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, மினுவங்கொடை,கம்பஹா பிரதேச சபையின் சில பகுதிகள் நீர் வழங்கல் சபை, பொதுமக்கள் தேவையான அளவிலான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மக்களின் புரிதலும் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.