Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில் புத்துயிர் பெறும் செங்காமம் புதிய நீர்வழங்கல் திட்டம்

Posted on July 7, 2025 by Admin | 322 Views

பொத்துவில் பிரதேச சபையின் PSDG–2025 வேலைத் திட்டத்தின் கீழ், செங்காமம் பிரதேசத்தில் நீர்வழங்கல் செயற்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய நீர்க்குழாய் பதிக்கும் பணிகள் இன்று (07 ஜூலை 2025) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டத்தை பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஜே.எப். இஸ்ஹாஸ் அஹமட், செயலாளர் ஏ.ஜீ. முபாரக், அதிகாரிகள், ஊழியர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நீர்வழங்கல் திட்டம், வட்டார மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.