அக்கரைப்பற்று அய்னா திருமண மண்டபத்தில், சட்டத்தரணியும் ஆய்வாளருமான சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய மூன்று முக்கியமான நூல்களின் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 4ஆம் திகதி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நூல்கள்:
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாவுல்லா, கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில், நூல்களின் உள்ளடக்கம், அதனுடைய சமூக மற்றும் அரசியல் பிணைப்பு குறித்து உரையாற்றப்பட்டதுடன், மேற்கண்ட நூல்கள் இலங்கை வரலாற்றின் முக்கியமான சம்பவங்களை ஆழமாகப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.