பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு ஏ. பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அவரது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகமான செய்திகளுக்கு எவரும் பதிலளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் சந்தேகத்துக்குரிய தகவல்கள் வந்தால், உடனடியாக அதிகாரபூர்வ முறையில் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.