Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தலுக்கான விசேட கூட்டம் அட்டாளைச்சேனையில்

Posted on September 9, 2025 by Admin | 334 Views

அட்டாளைச்சேனையில் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடு கூட்டம் இனிதே நடந்தேறியது.

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வை முன்னெடுக்க சிறப்பு கூட்டம் ஒன்று அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை சராஹ் பீச் ரிஸோர்ட் கூட்ட மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.எல். பாயிஸ், ஏ.சி. நியாஸ், எஸ்.எம். றியாஸ், தொழிலதிபர் ஏ.கே. அமீர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.