Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

தலை, கைகள், கால்கள் இல்லா சடலம் கரை ஒதுங்கியது

Posted on September 14, 2025 by Admin | 441 Views

மாரவில முது கட்டுவ கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்ததாவது …

கரை ஒதுங்கியிருந்த சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லை. நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே கரையொதுங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.