Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உயிரிழப்பு 159 ஆகவும், காணாமல் போனோர் 203ஆகவும் உயர்வு

Posted on November 29, 2025 by Admin | 185 Views

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும், இதுவரை 203 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட அந்த நிலையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 2,34,503 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,33,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 34,119 குடும்பங்களைச் சேர்ந்த 1,22,822 பேர் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 919 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.