Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

கலைஞர் சுபதம் விருது பெற்ற பாலமுனையை சேர்ந்த விரிவுரையாளர் அப்துல் லெத்தீப்

Posted on February 1, 2026 by Admin | 247 Views

(பாலமுனை செய்தியாளர்-ஹனி)

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் பங்கேற்புடன் கடந்த 27.01.2026 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் போது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் சுபதம்’ விருது பாலமுனையைச் சேர்ந்த ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். ஐ. அப்துல் லத்தீப் அவர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.