ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரான் தற்போது எதிர்கொண்டு வரும் ஆயுத மோதல்களின் சூழ்நிலையிலும் ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான கூட்டாளியாக தொடரும் என தனது வாழ்த்து செய்தியில் புடின் வலியுறுத்தியுள்ளார்.
முஜ்தபா காமேனி தனது தந்தை ஆரம்பித்த பணிகளையும் கொள்கைகளையும் கௌரவமாகவும் உறுதியுடன் தொடர்வார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.