Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

காலி தேசிய வைத்தியசாலையில் உள்ள ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted on March 11, 2026 by Admin | 298 Views

காலி தேசிய வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) முற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த சடலங்களை ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் சமீர தொடங்கொட இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.