சவூதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொன்சியுலர் சேவைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக வார நாட்களில் தூதரக சேவைகளை பெற இயலாதவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக ஒவ்வொரு மாத இறுதியிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் சேவைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விரிவான தகவல்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ அறிக்கையை சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ளது.
