Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

ஹஜ்ஜாஜிகளுக்காக அட்டாளைச்சேனையில் சிறப்பு துஆ நிகழ்ச்சி

Posted on April 27, 2026 by Admin | 174 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இவ் ஆண்டு புனித ஹஜ் யாத்திரைக்குச் செல்லவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல். ஹனீஸ் அவர்களின் தலைமையில் 2026.04.23 ஆம் திகதி அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் மரைக்காயர் சபை இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, உதவிக் கல்விப் பணிப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். பாயிஸ், பள்ளிவாயல் நிர்வாகத்தினர், மரைக்காயர் சபையின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், உலமாக்கள் உள்ளிட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஹஜ் யாத்திரைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக அனைவரும் இணைந்து மனமார்ந்த துஆ பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.