Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விமல் வீரவங்ச விடுவிப்பு

Posted on May 25, 2026 by Admin | 172 Views

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகை நிகழ்வை குழப்ப முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை விமல் வீரவங்ச தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.