உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் விளைவாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 9,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (நவம்பர் 11) நிலவும் விற்பனை விலைப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கம் 3,25,000 ரூபாய்க்கும், 22 கரட் ஒரு பவுன் தங்கம் 3,00,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கணித்து வருகின்றனர்.