Top News
| நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் | | மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்த அட்டாளைச்சேனை ரிபி ஜாயா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா | | மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சூடுபிடித்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் |
Feb 1, 2026

அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனைக்கு புதிய கணக்காளர் நியமனம்

Posted on January 27, 2026 by Admin | 158 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்)

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலங்கை கணக்காளர் சேவைத் தரத்தையுடைய உமர் லெப்பை முஹம்மட் றினோஸ் (SLACS) அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் புதிய கணக்காளராக இன்று (27) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இக் கடமையேற்பு நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது அக்கரைப்பற்று மாநகர சபையின் பதில் கணக்காளராகவும் கடமையாற்றி வரும் றினோஸ் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மத்தி மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி பணிமனைகளில் கணக்காளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.