Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

கலைஞர் சுபதம் விருது பெற்ற பாலமுனையை சேர்ந்த விரிவுரையாளர் அப்துல் லெத்தீப்

Posted on February 1, 2026 by Admin | 284 Views

(பாலமுனை செய்தியாளர்-ஹனி)

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் பங்கேற்புடன் கடந்த 27.01.2026 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் போது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் சுபதம்’ விருது பாலமுனையைச் சேர்ந்த ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். ஐ. அப்துல் லத்தீப் அவர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.