Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

முனையூர் இ.மு.ஜி.பாவின் சிறுகதைத் தொகுதி பாலமுனையில் வெளியீடு

Posted on February 2, 2026 by Admin | 186 Views

(பாலமுனை செய்தியாளர்-ஹனி)

முனையூர் இ.மு ஜி பா வின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு பாவலர் பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் 2026.02.01ம் திகதி பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.எல். ஹனீபா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் அலியார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது நூலாசிரியரின் இலக்கியப் பங்களிப்பு குறித்து பாராட்டுரைகள் இடம்பெற்றதுடன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.