Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அம்பாறை மாவட்ட வன எல்லைப் பிரச்சினைகளை தீர்த்து பயனாளிகளுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை 

Posted on February 26, 2026 by Admin | 335 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

நிலையான வன மேலாண்மை திட்டத்தின் கீழ் வன எல்லைகளைத் தீர்த்து நீண்டகால பாரம்பரிய நிலங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்கான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ. விக்கிரம நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரியந்த விஜேரத்ன, மஞ்சுள ரத்நாயக்க, ஏ. ஆதம்பாவா, முத்து ரத்வத்தே , எம்.எஸ்.உதுமாலெப்பை , எம்.எஸ்.அப்துல் வாஸித், கே.கோடீஸ்வரன்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, பிரதேச செயலாளர்கள், காணி அதிகாரிகள், வன பாதுகாப்புத் துறை மற்றும் வனவிலங்குத் துறையின் தலைமை அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.