உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதன் தாக்கம் இலங்கை உள்நாட்டு சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. அதன்படி, நாட்டில் தங்கத்தின் விலை கணிசமாக சரிந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
இன்று (04) காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாக இருந்த நிலையில் ஒரே நாளில் 12,000 ரூபாவிற்கும் மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையும் சரிவை கண்டுள்ளது. நேற்று 420,000 ரூபாவாக விற்பனையானது. இன்று 407,000 ரூபாவாக குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.