Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

காலி தேசிய வைத்தியசாலையில் உள்ள ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted on March 11, 2026 by Admin | 259 Views

காலி தேசிய வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) முற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த சடலங்களை ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் சமீர தொடங்கொட இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.