Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

காலி தேசிய வைத்தியசாலையில் உள்ள ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted on March 11, 2026 by Admin | 216 Views

காலி தேசிய வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) முற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த சடலங்களை ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் சமீர தொடங்கொட இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.