Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

Posted on March 11, 2026 by Admin | 303 Views

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் 1,408,635 குடும்பங்களுக்கு இந்த நலத்திட்டக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக மொத்தமாக 11,179,801,250 ரூபாவிற்கும் அதிகமான தொகை அரசால் ஒதுக்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

மேலும், அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காகவும் நாளை (12) 2,350,530,000 ரூபாவிற்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.