நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் விநியோக சவால்களைச் சிறப்பாகக் கையாளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண தெரிவித்தார்.
இந்த முறைப்படி வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்களாக (0, 2, 4, 6, 8) உள்ள வாகனங்களுக்கு இரட்டை திகிதிகளில் (எ.கா.: மார்ச் 18, 20, 22) எரிபொருள் வழங்கப்படும்.
அதேவேளை இறுதி இலக்கம் ஒற்றை எண்களாக (1, 3, 5, 7, 9) உள்ள வாகனங்களுக்கு ஒற்றை திகதிகளில் (எ.கா.: மார்ச் 19, 21, 23) எரிபொருள் விநியோகம் நடைபெறும்.