இஸ்ரேலின் டிமோனா நகரை குறிவைத்து ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் என்று அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடைபெறும் நேரத்தில் சம்பவத்தை தங்களது கைப்பேசிகளில் காணொளியாக பதிவு செய்ய முயன்றபோது அவர்கள் காயமடைந்ததாகவும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.