அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் மற்றும் ஐ. அஹமட் சிராஜ் ஆகியோர் இன்று திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.