(அட்டாளைச்சேனை செய்தியாளர்- நுஸ்கி)
அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலை வலுப்படுத்தவும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட ‘’அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்’’ நூலின் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (02.05.2026) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம்.தாஹிர், காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக், அனைத்து மாவட்டங்களிலிருந்து வருகை தந்த நிர்வாகிகள், மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் என 2000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





