Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

கொடூர வெப்பம் காரணமாக ஒரே நாளில் 34 பேர் பலி

Posted on May 24, 2026 by Admin | 71 Views

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கடும் வெப்ப அலை காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸை கடந்துள்ளதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கும் கடும் வெப்பம் நீடிக்கும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் போதிய அளவு தண்ணீர் அருந்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.