Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விமல் வீரவங்ச விடுவிப்பு

Posted on May 25, 2026 by Admin | 73 Views

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகை நிகழ்வை குழப்ப முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை விமல் வீரவங்ச தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.