Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

கொழும்பு மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு செல்லும் நிலை உறுதி!

Posted on May 18, 2025 by Admin | 119 Views

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்குச் செல்லுவது உறுதியடைந்துள்ளதாக ஆளுங்கட்சியுடன் நெருக்கம் உள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய தகவல்களின்படி, மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள 63 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், வருகிற ஜூன் 2ஆம் திகதி, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த விராய் பல்தசார், கொழும்பு மாநகர மேயராகப் பதவியேற்பார் என நம்பப்படுகிறது.

எதிர்க்கட்சிகளுக்குள் முரண்பாடுகள்: சஜித்தின் பிடிவாதம் தடையாகும்

மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உறுதியான நிலைப்பாடு, இந்த முயற்சிக்கு தடையாக உருவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.