Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

கொழும்பில் கனமழை தாக்கம்: 20க்கும் அதிகமான பகுதிகள் வெள்ளத்தில்

Posted on May 18, 2025 by Hafees | 185 Views

கொழும்பில் கனமழை காரணமாக 20க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

கொழும்பில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்ததால், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை நீர் வெள்ளமாக குவிந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நீர் வடிகாலமைப்புகளுக்கு அருகில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் என மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தை உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன. தற்போதைய நிலைமைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், மீள்சீரமைப்பு பணிகளும் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்நிலையில் தொடரும் வெள்ள அபாயங்களை தவிர்க்கும் வகையில், நீர் ஓட்ட பாதைகளில் உள்ள தடைகள் அகற்றப்பட்டு வருவதாகவும் மாநகர சபை அறிவித்துள்ளது.