Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில்  புத்துயிர் பெறும் கோமாரி உச்சிமலை வீதி

Posted on July 7, 2025 by Admin | 373 Views

பொத்துவில் பிரதேச சபையின் PSDG–2025 வேலைத் திட்டத்தின் கீழ் கோமாரி உச்சிமலை வீதியின் நிர்மாணப் பணிகள் இன்று (07 ஜூலை 2025) கௌரவ தவிசாளர் எஸ். எம். எம். முஷாரப் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ரி. சுபோகரன், செயலாளர் ஏ. ஜீ. முபாரக், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பல்வேறு பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த வீதி அமைப்பின் மூலம், குறித்த பகுதியின் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், உள்ளூர் அபிவிருத்திக்கான முக்கியமான அடித்தள பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.